Tuesday, February 7, 2012

மருந்தாகும் ’மா’ விதை

முக்கனிகளில் ஒன்று மா. உலகில் அதிக அளவில் உற்பத்தி ஆகும் கனிகளில் மாங்கனி 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நாம் மாங்கனிகளை சுவைத்துவிட்டு கொட்டைகளை வீசி எறிந்து விடுகிறோம். ஆனால் மாங்கொட்டைகளில் மருத்துவ குணம் இருப்பதாக கனடா நட்டில் கண்டுபிடித்து உள்ளனர்.

உணவுப் பண்டங்களை கெட்டுப்போகச்செய்யும் பாக்டீரியா இனம் லிஸ்டீரியா.இதனால் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர்.மாங்கொட்டையில் உள்ள ஒரு ரசாயனம் இந்த பாக்டீரியாக்களை எதிர்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது.இதனால் லிஸ்டீரியாசிஸ் வியாதியை தடுக்கலாம்.

மேலும் பாக்டீரியா நுண்நுயிரிகளால் எற்படும் பல்வேறு வியாதிகளுக்கு இதை மருந்தாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.இது போல மற்ற கனிகளின் விதையிலும் இந்த ரசாயனம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Monday, June 21, 2010

அறிவுக்கு சில

சீனாவில் 750 மீட்டர் நீளத்தில் ஒரு கண்ணாடி பாலம் உள்ளது. அதன் பெயர் சைதூஸ்.

பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம் விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில் இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்கவேண்டும்.

சாகும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரே உயிரினம் முதலைதான்.

டெல்லியில் பறவைகளுக்கென்று ஒரு மருத்துவமனை இருக்கிறது.

சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு தாதுக்கள் கலந்திருந்தால் மின்சாரம் கடத்தப்படும்.

கரடி

  • ரடி நாய்க் குடும்பத்தைச் சேர்ந்தது. பழுப்புக்கரடி 9 அடி நீளமும் 780 கிலோ எடையும் கொண்டது. கரடி குளிர் காலத்தை தூங்கியே கழிக்கும். கரடிக்கு மோப்பசக்தி அதிகம்.
இரவில் கரடிகள் சுறுசுறுப்பாக செயல்படும். கரடி மரங்களில் தலைகீழாக ஏறும்.

கண்டுபிடித்தது

1774 ஆகஸ்ட் 1 - ந்தேதி: காற்றில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.

1844 ஜூன் 6: ஒய்.எம். சி.ஏ .சங்கம் லண்டனில் தொடங்கப்பட்டது.

1847 நவம்பர் - 4: குளோரோபார்ம் (சர் ஜேம்ஸ் சிம்சன்) கண்டுபிடிக்கப்பட்டது.

1876 பிப்ரவரி - 14: தொலைபேசி காப்புரிமை கோரி அலெக்சாண்டர் கிரகாம்பெல் விண்ணப்பித்தார்.

கண்டுபிடித்தவர்கள்

போனோகிராப் - எடிசன்.

டிரான்சிஸ்டர் - ஷீக்லே.

கேமிரா - லூமியர் சகோதரர்கள்.

பேசும் படம் - வார்னர் சகோதரர்கள்.

காண்டாக்ட் லென்ஸ் - டேவல்.

ஈ.சி.ஜி. இயந்திரம் - ஐந்தோலன்.

சுயசரிதைகள்

கிரிக்கட் வீரர் கபில்தேவின் சுயசரிதை - ”ஸ்ட்ரெயிட் பிரம் தி ஹார்ட்”

சதாம் உசேனின் சுயசரிதை - “மென் அண்ட் எ சிட்டி”

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் சுயசரிதை - “த்விகாந்திதா”

ஹிலாரி கிளிண்டனின் சுயசரிதை - “லிவிங் ஹிஸ்டரி”

சிதார் இசை மேதை ரவிசங்கரின் சுயசரிதை - “ராகமாலிகை”

எழுத்தாளர் கமலா தாஸின் சுயசரிதை - “மை ஸ்டோரி”

முன்னால் கிரிக்கட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சுயசரிதை - ”கட்டிங் எட்ஜ்”

Sunday, June 20, 2010

போலீஸ் உருவானவிதம்

ரு நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ராணுவம் உள்ளது. இதைப்போலவே உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசர் உள்ளனர். ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார்.

இந்த முறை ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு இங்கலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 - ம் ஆண்டு டிசம்பர் 7 - ந்தேதி கிழக்கிந்திய கம்பனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1861 - ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. அப்போது காவல்துறைக்கு சிவப்பு மற்றும் நீலநிற உடையும் சீருடையாக தரப்பட்டன.

இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் காவல்துறை தனித்தனியாக இயங்கிவருகிறது.