Sunday, June 20, 2010

போலீஸ் உருவானவிதம்

ரு நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ராணுவம் உள்ளது. இதைப்போலவே உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசர் உள்ளனர். ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார்.

இந்த முறை ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு இங்கலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 - ம் ஆண்டு டிசம்பர் 7 - ந்தேதி கிழக்கிந்திய கம்பனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1861 - ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. அப்போது காவல்துறைக்கு சிவப்பு மற்றும் நீலநிற உடையும் சீருடையாக தரப்பட்டன.

இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் காவல்துறை தனித்தனியாக இயங்கிவருகிறது.

No comments:

Post a Comment