Saturday, June 19, 2010

கழுதையின் ‘கான ஆசை’ (நீதிக்கதை)

ழுதை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வெட்டுக்கிளி இனிமையாக ஒலி எழுப்புவதை கழுதை கேட்டது. அதன் பாடல் கழுதையின் மனதை மயக்கியது.

வெட்டுக்கிளியைப் போல தானும் படவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது கழுதை. அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்றுவெட்டுக்கிளியிடம் கேட்டது” நாங்கள் பனித்துளியை பருகுகிறோம் அது தான் எங்கள் இனிமையான குரலுக்குக் காரணம்!” என்றது வெட்டுக்கிளி. அன்று முதல் புல்லில் உள்ள பனித்துளியையே பருகுவது என்று தீர்மானம் செய்தது கழுதை. கடைசியில் அது பட்டினியால் இறந்துபோனது.

நீதி: மற்றவர்களைப் பார்த்து ஆசைப்படுவது ஆபத்தானது.

No comments:

Post a Comment