Monday, August 10, 2009

எடிசனின் வெற்றிக்கு காரணம்

ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் 'உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?'என்று கேட்டனர்.அதற்கு எடிசன் கூறிய பதில் ...
'எனக்கு காது சரியாக கேட்காது.எனவே அடுத்தவர் திட்டினாலும் கேட்காது; புகழ்ந்தாலும் கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலைகளிலேயே கவனம் செலுத்த முடிந்தது. அதனாலேயே என்னால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது'.என்று கூறினார்.
ஊனம் என்பதை ஊனமாக்கியதால்தான், எடிசன் இன்றும் குறையாத புகழோடு பேசப்படுகிறார்.

No comments:

Post a Comment