Sunday, October 11, 2009

’ரோச்சி’ எல்லை

ஒரு கிரகத்தினுடைய துணைக் கோளானது, அந்த கிரகத்தைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850 - ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ‘ரோச்சி எல்லை’ என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கிரகத்தின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனி கிரகத்தின் ரோச்சி எல்லை அதன் மையத்திலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ’ரோச்சி எல்லை’ பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment