Monday, October 12, 2009

முதல் மனிதன்

ஆப்பிரிக்காவில் தோன்றியவர்களையே நாம் முதல் மனிதர்களாய் நினைக்கிறோம். இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன் எளிதில் கையாளக் கூடிய மனிதன் தோன்றினான். பிறகு ஒரு பத்து லட்சம் ஆண்டுகள் கழித்து செங்குத்தான, நிமிர்ந்த மனிதன் (இன்றைய மனிதனல்ல) தோன்றினான்.

சற்று குனிந்த மனிதன் தான் முதன் முதலில் கருவியை பயன்படுத்தினான். ’கை வேலை மனிதன்’ என்றும் இவனுக்கு பெயருண்டு. சிறிய கருவிகளான செதுக்குதல் கருவிகள் போன்றவற்றை கூலாங்கற்கள் மூலம் செய்தான். நிமிர்ந்த மனிதன் உருவாக்கிய கருவிகள் மேம்பட்டு இருந்தன. கற்களை கை கோடாரி போல வடிவமைத்ததோடு, முதன் முதலில் நெருப்பயும் பயன்படுத்தினான். நிமிர்ந்த நிலை மனிதன் ஒரு நாடோடி.
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்த நிலை மனிதன் ஆப்பிரிக்காவைவிட்டு ஐரோப்பா மற்றும் ஆசியா நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.

கைகளை பயன்படுத்தி வேலைகள் செய்த மனிதனும், நிமிர்ந்த நிலை மனிதனும் தாவரம் மற்றும் இறைச்சியை உண்டனர். இறைச்சி அவர்கள் பார்க்கும் இறந்த பிராணிகளிடமிருந்து கிடைத்தது. சிறிய விலங்குகளை அவர்கள் வேட்டையாடி இருக்கலாம். தாவரங்கள், விதைகளில் உள்ள பழங்களை உண்டான். கற்கருவிகளைக் கொண்டு தங்கள் உணவை வெட்டவும், சுரண்டவும் பயன்படுத்தினான்.

1 comment:

  1. ஆசியா கண்டத்தில் உள்ள சிறப்புகளில் தமிழகத்தின் பங்கு பற்றிய கருத்துக்கள் தேவை..............

    ReplyDelete