Sunday, October 11, 2009

மரங்களின் வளையங்கள்

மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட உதவும் படிப்பின் பெயர்,’டெண்ட்ரோகுரோனாலஜி’.
’வளர்ச்சி வளையங்கள்’ எனப்படும் அவை ஒவ்வோர் ஆண்டும் உருவாகின்றன. செழுமையான ஆண்டுகளில் அந்த வளையங்கள் சற்று பட்டையாகவும், வறட்சியான ஆண்டுகளில் அவை மெலிதாகவும் காணப்படும். எனவே அந்த வளையங்கள் மரங்களின் வயதை கண்டுபிடிக்க மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதியில் ஒவ்வெரு பருவமும் எப்படி அமைந்திருந்தது என அறியவும் உதவுகின்றன. ‘டெண்ட்ரோகுரோனாலஜி’ படிப்பை உருவாக்கியவர் ஏ.இ.டக்ளஸ் என்ற விஞ்ஞானி ஆவார்.

No comments:

Post a Comment