Sunday, October 11, 2009

தகவல் களஞ்சியம்

பூமி-நிலா
பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 86 மையில்கள்.

மோனாலிசா
ஓவியர் லியோனார்டா டாவின்சி வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா. அப்பெண்மணி ஒரு பூ வியாபாரியின் மனைவி.

இலங்கை
இலங்கையின் ஆங்கிலேயர் ஆட்சிக் கால பெயர் சிலோன். அது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது 1972 - ம் ஆண்டு மே மாதம் தான்.

வானம் - கடல்
வானும் கடலும் நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை விளக்கியவர் நம் நாட்டு விஞ்ஞானி சி.வி.ராமன்.

கிரகணங்கள்
கிரக்கணங்கள் தோன்றுவதற்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டவர் ஆரியப்பட்டா.

இந்திய தபால் துறை
இந்திய தபால்த் துறையில் வி.பி.பி. முறை 1877 - ம் ஆண்டும், மணியாடர் முறை 1880 - ம் ஆண்டும், அஞ்சலக சேமிப்பு முறை 1882 - லும், பின் கோடு முறை 1972 - லும் அறிமுகமாயின.


No comments:

Post a Comment