Wednesday, October 21, 2009

மருந்தாகும் விசம்

சில நோய்களுக்கு விஷமே மருந்தாக அமைவதை அறிந்திருக்கிறோம். குறிப்பாக பாம்பு விசத்தில் இருந்து பல ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது போல கருந்தேள் விசத்தில் இருந்து மூளை புற்றுநோய்க்கு மருந்துதயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். தேள் விசத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது அதில் உள்ள விசத் தன்மை மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிடுகிறது. இந்த மருந்து மூளைப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் மற்றும் மூளையில் ஏற்படும் சதை வளர்ச்சி நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது தேள் விசத்தில் உள்ள மூலப்பொருள் சிதைவடைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக விசத்தில் உல்ள குறிப்பிட்ட புரோட்டின் புற்றுநோய் உருவாக்கும் செல்களைமட்டும் தேடிச் சென்று அழிக்கும் மருத்துவத்தன்மை பெற்றுவிடுகிறது.

No comments:

Post a Comment