Wednesday, October 7, 2009

பாலைவனச் சோலை

பாலைவனத்திலும் ‘தண்ணீர் கண்ணில் தென்படும் பகுதிதான் பலைவனச்சோலை’ எனப்படுகிறது. இங்கே நிலத்தடி நீர் தரை மட்டத்தை அடைந்து ஒரு குளத்தையோ, நீரூற்றையோ உருவாக்குகிறது. ஒரு பாலைவனச் சோலை என்பது சில பேரீச்சை மரங்களுடன் கூடிய குளமாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயம் செய்து வசிக்கக்கூடிய அளவு பெரியதாகவோ இருக்கலாம். பாலைவனப் பகுதியில் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து மையங்களாக பாலைவனச் சோலையாக உள்ளன. பாலைவனப் பகுதியில் பயணம் செய்பவர்கள் உணவுக்காகவும், ஓய்வுக்காகவும் பாலைவனச் சோலைப் பகுதியில் நின்று செல்வார்கள். அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ்வேகாஸ், கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் போன்ற நகரங்கள் இயற்கையான பாலைவனச் சோலையைச் சுற்றி உருவானவையாகும்.

No comments:

Post a Comment